Saturday 23 November 2013

தினம் ஒரு மலர் இன்றைய மலர் காஞ்சி மலர்

தினம் ஒரு மலர் ஐந்தாம் தமிழ் சங்கம்

இன்றைய மலர் காஞ்சி மலர்


காஞ்சி மலர்


தாவரவியல் :
(Trewia nudiflora) வெள்ளை தேக்கு Euphorbiaceae என்னும் தாவரவியல் குடும்பத்தை சார்ந்தது இருவித்திலை மராமாகும் 

காஞ்சித்திணை

காஞ்சிப் பூவைச் சூடிக்கொண்டு போரிடுவது காஞ்சித்திணை.
தொல்காப்பியம் கூறும் புறத்திணை ஏழில் காஞ்சித்திணை ஒன்று. இறந்தவர்களுக்காக இரங்கல், இறந்தவருடன் தானும் முடிதல் முதலான செய்திகளைக் கூறுவது தொல்காப்பியர் காட்டும் காஞ்சித்திணை.
ஐயனாரிதனார் என்னும் ஒன்பதாம் நூற்றாண்டுப் புலவர் தாம் எழுதிய புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூலில் புறப்பொருளைப் பன்னிரண்டு திணைகளாக வகுத்துள்ளார். அவற்றில் பகைவனை வெல்லக் கருதியவன் வஞ்சிப்பூ சூடிப் போருக்குக் செல்வான் என்றும், அவனது போரை எதிர்கொண்டு தாக்குபவன் காஞ்சிமலர் சூடிப் போரிடுவான் என்றும் இவர் குறிப்பிடுகிறார்.

காஞ்சி மலர்



சங்கப்பாடல்களில் காஞ்சிமலர்

காஞ்சி மரத்துக்குச் செம்மருது என்னும் பெயரும் உண்டு.

நறும்பூங் கோதை தொடுத்த நாள்சினைக் குறுங்கால் காஞ்சி - சிறுபாணாற்றுப்படை 179

குறைந்த உயரத்திலேயே கிளைகள் விடும்.
பசுமையான இலைகளை உடைய குருகு என்னும் கொடி குறுங்கால் காஞ்சி மரத்தில் ஏறிப் படர்ந்து பூத்துக் கிடக்கும்-பெரும்பாணாற்றுப்படை 375

ஆற்றோர ஊர்கள் வெள்ளத்தால் தாக்கப்படுவதிலிருந்து காப்பாற்றும் மரங்களாகய்க் காஞ்சி மரங்கள் இருந்தன- மலைபடுகடாம் 449

காஞ்சிப் பூக்கள் அதன் நனை பருவத்தில் மீன் போலத் தோற்றமளிக்கும்-ஐங்குறுநூறு 1

பூக்கள் மரத்தில் இருக்கும்போதே அதன் தாதுகள் கொட்டும்- அகநானூறு

காஞ்சிப்பூவின் மணத்தை வதுவை நாற்றம் என்றனர் -அகநானூறு

மணல் மலிந்த ற்றுத் துறைகளில் மருதும் காஞ்சியும் நெருங்கி வளரும் -பதிற்றுப்பத்து 23

மீனேற்றுக் கொடியோன் போல் மிஞிறு ஆர்க்கும் காஞ்சி - கலித்தொகை 26-3 காஞ்சிமரம் காமன் போல் அழகு மிக்கது.

மயில் மணிச்சிரல் என்னும் மீன்கொத்தி குயில் முதலான பறவைகள் காஞ்சி காஞ்சி மரத்தில் இருப்பிடம் கொள்வதை விரும்பும்.

காஞ்சி மலர்

பயன்பாடுகள் : 

காஞ்சி இலைகளை ஆயர் தம் ஆடுமாடுகளுக்குத் தீனியாக அறுத்துப் போடுவர்- கலித்தொகை 34-8

காஞ்சி தழைக்காக வெட்டப்படும் -பதிற்றுப்பத்து 62

மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் காஞ்சியும் ஒன்று.குறிஞ்சிப்பாட்டு

அமரும் இருக்கைகள் காஞ்சித் தழையில் செய்யப்படுவது உண்டு.

காஞ்சித் தளிர்களை ஆரமாகக் கட்டி அணிந்துகொள்வர்


No comments:

Post a Comment